- புதிய விலைகள் ஏப்ரல் 1, 2024 முதல் அமலுக்கு வரும்
- காரின் விலை மூன்று சதவீதம் அதிகரிக்கும்
கியா இந்தியா தனது அனைத்து மாடல்களின் விலையையும் ஏப்ரல்-2024 முதல் மூன்று சதவிகிதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. விலை உயர்வு இந்த ஆண்டு முதல் முறையாகும், மேலும் பொருட்களின் விலைகள் மற்றும் விநியோகம் தொடர்பான உள்ளீடுகள் இந்த உயர்வுக்குக் காரணம் என்று பிராண்ட் தெரிவித்துள்ளது.
வாகன உற்பத்தியாளர் வரிசையில் செல்டோஸ், சோனெட் மற்றும் கேரன்ஸ் உள்ளிட்ட உள்ள அனைத்து மாடல்களின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும். விற்பனையைப் பொறுத்தவரை, மொத்தத்தில் கியா 1.16 மில்லியன் கார்களை விற்பனை செய்துள்ளது. மிட்-சைஸ் எஸ்யுவி செல்டோஸ் 6.13 லட்சம் விற்பனையைத் தாண்டியது, சோனெட் 3.95 லட்சம் கார் விற்பனையையும், கேரன்ஸ் எம்பீவி 1.59 லட்சம் கார் விற்பனையையும் பெற்றுள்ளது.
எலக்ட்ரானிக் ஆயில் பம்ப் கன்ட்ரோலரில் உள்ள சிக்கலைத் தீர்க்க, கியா சமீபத்தில் 4,358 பெட்ரோல்-சிவிடீ செல்டோஸ்களை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, கியா தற்போது ஃபேஸ்லிஃப்ட் கார்னிவலில் வேலை செய்து வருகிறது, இது சில மாதங்களில் லான்ச் ஆக வாய்ப்புள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்