- மாடல்ஸின் ஃப்ரண்ட் டோர் ஹேண்டல்ஸின் சென்சாரை மாற்ற பிராண்ட் திரும்பப் பெற்றது
- தற்போது நிசான் வழங்கும் ஒரே மாடல் மேக்னைட் மட்டுமே
நிசான் பிராண்ட் இந்தியாவில் மேக்னைட் சப்-4-மீட்டர் எஸ்யுவியை தானாக முன்வந்து திரும்பப் பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கார்களை திரும்பப் பெறுவதற்கான காரணத்தையும் மேக்னைட் கூறியுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், 'மேக்னட் மாடல்களில் ஃப்ரண்ட் டோர் ஹேண்டல்ஸின் சென்சாரை மாற்றுவது' என்று வாகன உற்பத்தியாளர் கூறுகிறார்.
நிசான் இந்தியாவின் கூற்றுப்படி, நவம்பர் 2020 மற்றும் டிசம்பர் 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட அனைத்து மேக்னைட் யூனிட்களும், என்ட்ரி-லெவலான XE மற்றும் XL வேரியன்ட்ஸ் உட்பட, பிரச்சனைக்காக திரும்ப அழைக்கப்பட்டுள்ளன. தற்போது, நிசான் நிறுவனம் இம்மாதத்தில் அதாவது ஏப்ரல் மாதத்தில் அந்தந்த கார்களில் சிக்கலை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் திரும்பப் பெறுவதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும், வழக்கமாக அன்றாடம் செய்வது போல் தங்கள் கார்களை ஓட்ட முடியும் என்றும் நிசான் தெரிவித்துள்ளது. இந்த புதிய சென்சார் டோர் ஹேண்டல்ஸ் இலவசமாக நிறுவப்பட்டுள்ளதாக நிசான் இந்தியா கூறுகிறது. திரும்பப் பெறுதல் தொடர்பான முழுமையான விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள நிசான் சேவை மையத்தைப் பரிந்துரைக்கலாம்.
நிசான் மேக்னைட் XE, XL, XV மற்றும் XV ப்ரீமியம் ஆகிய நான்கு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. மாருதி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக, இந்த மாடல் 5 மோனோ-டோன் மற்றும் 4 டூயல் டோன் வண்ணங்களில் வழங்கப்படுகிறது. இன்ஜின் விருப்பங்களில் 1.0-லிட்டர் என்ஏ மற்றும் டர்போ-பெட்ரோல் மோட்டார்கள் அடங்கும், இவை 5-ஸ்பீட் எம்டீ, ஏஎம்டீ மற்றும் சிவிடீ டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்