- பாரத் என்கேப் திட்டம் ஆகஸ்ட் 2023 இல் தொடங்கப்பட்டது
- முன்னதாக, டாடா ஹேரியர் மற்றும் சஃபாரியின் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது
மாருதி சுஸுகி தனது மூன்று கார்களை பாரத் என்கேப் (பிஎன்சிஏபி) கிராஷ் டெஸ்ட்டுக்கு அனுப்புவதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் இந்த சொந்த கிராஷ் டெஸ்ட் திட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது மற்றும் அதன் முதல் சோதனை முடிவுகள் டிசம்பர் 2023 இல் அறிவிக்கப்பட்டது.
தற்போது, மாருதி சுஸுகி நிறுவனம் ப்ரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா மற்றும் பலேனோ கார்களை இந்தியாவின் என்கேப் கிராஷ் டெஸ்ட்டுக்கு அனுப்ப தயாராகி வருகிறது. இது இரண்டாவது செட் க்ராஷ் டெஸ்ட் ஆக இருக்கலாம், இதில் முதலாவது டாடா மோட்டார்ஸின் ஹேரியர் மற்றும் சஃபாரி எஸ்யுவிகள் ஆகும்.
மாருதி கடந்த மாதம் தான் ஃப்ரோன்க்ஸ் கூபே-எஸ்யுவி கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட ஒரு வீடியோவை வெளியிட்டது. சோதனையானது பலேனோ அடிப்படையிலான மாடலின் இரண்டு வெவ்வேறு வேரியன்ட்ஸ் உள்ளடக்கியது, இவை டூயல் ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், இஎஸ்பீ, ஹில்-ஹோல்ட்-அசிஸ்ட், ஸ்பீட் அலர்ட் சிஸ்டம், சீட்-பெல்ட் ரிமைன்டர் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பல ஸ்டாண்டர்ட் வேரியன்ட்ஸில் வழங்கப்படும் அம்சங்களுடன் சோதனை செய்யப்பட்டது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்