- 2024 இறுதியில் அறிமுகமாகும்
- இது புதிய எலக்ட்ரிக் காராக இருக்கும்
மாருதி சுஸுகி இந்தியாவில் அதன் முதல் ஃபுல்லி எலக்ட்ரிக் மாடலான EVX யில் வேலை செய்து வருகிறது. இந்த பார்ன்-எலக்ட்ரிக் எஸ்யுவி டாடா நெக்ஸான் இவி மற்றும் மஹிந்திரா XUV400 உடன் போட்டியிடும். இப்போது பிராண்ட் வரவிருக்கும் மாருதி சுஸுகி EVX க்கான திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது.
இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் நாட்டில் EVX எஸ்யுவியை அறிமுகப்படுத்தும். அதன் விலை குறைவாக இருக்க, பிராண்ட் இந்த மாடலை உள்நாட்டிலேயே தயாரிக்கும். மேலும் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
சமீபத்தில் இந்த எலக்ட்ரிக் மாடல் இந்தியாவில் டெஸ்டிங்கில் போது பார்க்கப்பட்டது. இதில் 360-டிகிரி கேமரா ஓஆர்விஎம்யில் கேமரா, மல்டி-ஸ்போக் அலோய் வீல்ஸ், ஸ்டாப் லேம்புடன் கூடிய ரூஃப் ஸ்பாய்லர், வாஷருடன் ரியர் வைப்பர் மற்றும் சி-பில்லரில் பொருத்தப்பட்ட டோர் ஹேன்டல்ஸ் போன்ற அம்சங்களை வெளிப்படுத்தியது.
இது 60kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும் மற்றும் இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ ரேஞ்ச் வரை செல்லும் என்று பிராண்ட் கூறியுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்