- புதிய முன்முயற்சி பலன்கள் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும்
- ஆர்எஸ்ஏ திட்டம் இல்லாமல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூட இலவச டோயிங் கிடைக்கும்
மைச்சாங் சூறாவளிக்குப் பதில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் முயற்சியை மஹிந்திரா அறிவித்துள்ளது. மஹிந்திரா எஸ்யுவி உரிமையாளர்களுக்கு இந்த முயற்சியின் ஒரு பகுதியாக நிறுவனம் பலவிதமான ஆதரவை வழங்கும். முக்கிய அம்சங்களாக ஆர்எஸ்ஏ, செலவு இல்லாத ஆய்வு மற்றும் சேத மதிப்பீடு மற்றும் நிதி ஆகியவை அடங்கும் சிறப்பு தள்ளுபடிகள் மூலம் நிவாரணம்.
பாதிக்கப்பட்டவர்களின் வாகனங்களை இழுத்துச் செல்ல 50 கி.மீ எல்லைக்குள் சாலையோர (ஆர்எஸ்ஏ) உதவியை மஹிந்திரா வழங்கும் அருகிலுள்ள மஹிந்திரா அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்க்கு இழுத்து செல்லும். இந்த சேவைவை ஆர்எஸ்ஏ திட்டம் இல்லாதவர்ககளும் இந்த சேவையைப் பயன்படுத்தலாம். மேலும், சர்வீஸ் குழுக்கள் விரிவான ஆய்வுகள் மற்றும் வாடிக்கையாளருக்கு எந்த செலவும் இல்லாமல் சேதத்தின் அளவை மதிப்பிடுதல்க்கு தயாரான நிலையில் உள்ளன.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் நிதி தாக்கத்தை குறைக்க உதவும் வகையில், மஹிந்திரா வாடிக்கையாளர்க்கு பழுதுபார்ப்பு விலைப்பட்டியளில் சிறப்பு தள்ளுபடிகளை வழங்குகிறது. மேலும், இம்முயற்சி வரும் டிசம்பர், 31ம் தேதி 2023 வரை அமலில் இருக்கும். அதே நேரத்தில், மஹிந்திரா தனது வாடிக்கையாளர்களை மேலும் சேதத்தை தடுக்க தங்கள் எஸ்யுவிகளை தொடங்குவதை எச்சரித்துள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்