- செல்டோஸ் மீது அதிகபட்சமாக 12,362 யூனிட்ஸ் விற்பனை செய்யபட்டதாகும்
- ஒரு ஒரு ஆண்டின் விற்பனையில் 4.41 சதவீதம் அதிகரித்துள்ளது
கியா இந்தியா அக்டோபர் மாதத்தில் 24,351 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது. இந்த பிராண்டின் படி, பண்டிகை காலத்தின் காரணமாக, புதிய செல்டோஸ் அதிகமாக விற்பனை செய்யப்பட்டன, இதன் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு விற்பனையில் 4.41 சதவீதம் வளர்ச்சியை கண்டது. அதேசமயம், கடந்த ஆண்டு அக்டோபரில், நிறுவனம் மொத்தம் 23,323 யூனிட்ஸை விற்பனை செய்திருந்தது.
விற்பனை புள்ளிவிவரங்களைப் பற்றி பேசுகையில், செல்டோஸ் கார் தயாரிப்பாளரின் சிறந்த விற்பனையான காரில் ஒன்றாகும், இது 12,362 யூனிட்ஸை எட்டியுள்ளது. அதைத் தொடர்ந்து சோனெட் 6,493 யூனிட்ஸ், கேரன்ஸ் 5,355 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது. இது தவிர, டொமெஸ்டிக் மார்க்கெட்டில் கியா இந்தியா 141 யூனிட் EV6 ஐ விற்பனை செய்துள்ளது.
இந்த ஆண்டு, அக்டோபர் வரை 2,19,702 யூனிட்ஸை கியா பதிவு செய்துள்ளது. இந்த விற்பனையில் செல்டோஸின் எண்ணிக்கை 83,250 யூனிட்ஸாக இருந்தது, அதைத் தொடர்ந்து சோனெட் 73,333 யூனிட்ஸ் மற்றும் கேரன்ஸ் 60,817 யூனிட்ஸ். இந்த பிராண்ட் தற்போது சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டில் வேலை செய்து வருகிறது, இதன் ஸ்பை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வந்துள்ளன, இது அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய கியா இந்தியாவின் சேல்ஸ் மற்றும் மார்கெட்டிங் நேஷனல் ஹெடான ஹர்தீப் சிங் ப்ரார், “பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களின் வரவேற்பு, இந்தியாவில் எங்களின் நான்காவது அதிகபட்ச மாதாந்திர விற்பனையை எட்ட உதவியுள்ளது. செல்டோஸ், சோனெட் மற்றும் கேரன்ஸ் போன்ற எங்கள் தயாரிப்புகள் கூட, கடுமையான போட்டியின் போதும் அந்தந்தப் பிரிவுகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன, இது ஒரு பெரிய சாதனை. வரும் மாதங்களில் இந்த விற்பனையை தக்கவைக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்