![அடுத்த 6 ஆண்டுகளில் 9 எஸ்யுவி’ஸ் ஐ மஹிந்திரா கொண்டு வர திட்டமிட்டுள்ளது அடுத்த 6 ஆண்டுகளில் 9 எஸ்யுவி’ஸ் ஐ மஹிந்திரா கொண்டு வர திட்டமிட்டுள்ளது](https://imgd.aeplcdn.com/642x361/n/cw/ec/177739/rear-badge0.jpeg?isig=0&q=80)
- மஹிந்திரா நிறுவனம் 9 ஐசிஇ மற்றும் 7 எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தவுள்ளது
- மஹிந்திரா இவி’யை விட ஐசிஇ மாடல்களில் அதிக முதலீடு செய்யும்
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒன்பது ஐசிஇ மாடல்களையும் ஏழு இவிகளையும் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஐசிஇ மாடல்களில் முக்கியமாக எஸ்யுவிகள் அடங்கும், அதே நேரத்தில் இந்த பிராண்ட் அதன் ஏழு இவிகளை இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் பார்ன் எலக்ட்ரிக் வாகனங்களின் கீழ் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த உள்ளது. 2024 நிதியாண்டில் எஸ்யுவி சந்தையில் மஹிந்திராவின் பங்கு 20.04% ஐ எட்டியுள்ளது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம்.
தற்போது, மஹிந்திராவின் ஆலை 9,000 வாகனங்களைத் தயாரிக்கும் திறனைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் பிராண்ட் இந்த திறனை விரைவில் அதிகரிக்கும் என்று கூறுகிறது. எம்&எம் லிமிடெட் இன் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ டாக்டர் அனிஷ் ஷா கூறுகையில், 'மஹிந்திரா வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்து வருவதால், வெயிட்டிங் பீரியட்டை குறைக்கும் வகையில் எங்களது ஆலையில் தற்போதுள்ள உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். எங்களால் 10,500 வாகனங்கள் வரை உற்பத்தி செய்ய முடியும், விரைவில் இதை அடைய முயற்சிக்கிறோம்.
எலக்ட்ரிக் ஐ விட பெட்ரோல் மற்றும் டீசலில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்
ஐசிஇ மாடல்கள் மீது 14,000 கோடி ரூபாயும், இவிகள் மீது 12,000 கோடி ரூபாயும் முதலீடு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிராண்ட் தொடர்ந்து ஐசிஇ மாடலில் அதிக கவனம் செலுத்தும் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. எம்&எம் லிமிடெட் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜேஷ் ஜெஜூரிகர் கூறுகையில், 'நாங்கள் எலக்ட்ரிக் வாகனங்களில் வேலை செய்து வருகிறோம், ஆனால் இதற்கிடையில் ஐசிஇ மாடல்களை புறக்கணிக்க முடியாது. எனவே, மஹிந்திரா தனது வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் பொருத்தமான தயாரிப்புகளை வழங்க தயாராக உள்ளது, அந்த முயற்சியில் நாங்கள் இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.
தற்போது, மஹிந்திராவின் எலக்ட்ரிக் கார்களின் பட்டியலில் XUV400 சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால் நிறுவனத்தின் பார்ன்-எலக்ட்ரிகின் கீழ் முதல் இவி XUV.e8 ஆகும், இது இந்த ஆண்டின் இறுதியில் மார்க்கெட்க்கு வரும். இது XUV700 ஐ விட சற்று பெரியதாக இருக்கும். e8 க்குப் பிறகு, இந்த இந்திய கார் தயாரிப்பாளர் கூபே-எஸ்யுவி வெர்ஷனான e9 மற்றும் க்ரெட்டா அளவிலான எலக்ட்ரிக் எஸ்யுவியை இந்திய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்