- வெல்ஃபயர், லேண்ட் க்ரூஸர் மற்றும் ஹைலக்ஸ் விலையில் எந்த மாற்றம் இல்லை
- உயர்த்தப்பட்ட விலை ஜூலை 5 முதல் அமலுக்கு வந்தது
ஜூலை மாதத்தில் இருந்து விலை அதிகரித்துள்ளது
டொயோட்டா நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட வாகனங்களின் விலையை ஜூலை 5 முதல் உயர்த்தியுள்ளது. வெல்ஃபயர், லேண்ட் க்ரூஸர் மற்றும் ஹைலக்ஸ் விலையில் எந்த மாற்றம் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
டொயோட்டாவின் எஸ்யுவிஸின் விலை
டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் லெஜெண்டர் ரூ.40,000 விலை உயர்வு பெற்றுள்ளது. அர்பன் க்ரூஸர் ஹைரைடரின் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் வேரியண்ட்ஸின் விலை இப்போது ரூ. 25,000 அதிகமாக உள்ளது, அதே சமயம் மீதமுள்ள ரேஞ்ச்க்கு ரூ.13,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளன.
மற்ற டொயோட்டா கார்ஸில் எவ்வளவு விலை உயர்ந்துள்ளது?
டொயோட்டா கேம்ரி அதிகபட்சமாக ரூ.46,000 பெற்றுள்ளது, இப்போது ரூ.46.17 லட்சம் தொடக்க விலையில் கிடைக்கிறது. V ஏஎம்டீ தவிர, க்ளான்ஸாவின் மற்ற வேரியண்ட்ஸின் விலைகளும் 10,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளன. இதேபோல், GX வேரியண்ட்ஸ் தவிர, க்ரிஸ்டாவின் மற்ற அனைத்து வேரியண்ட்ஸின் விலையும் ரூ.25,000 வரை அதிகமாக இருக்கும். இது தவிர ஹைகிராஸ் காரின் விலை ரூ.27,000 உயர்த்தப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்