- இந்தியாவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .6.13 லட்சத்திலிருந்து தொடங்குகின்றன
- இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது
டாடா மோட்டார்ஸ் தனது என்ட்ரி லெவல் எஸ்யுவி பஞ்சை இந்தியாவில் முதல் முறையாக 2021 இல் லான்ச் செய்யப்பட்டது. அப்போதிருந்து, ஹூண்டாய் எக்ஸ்டருடன் போட்டியிடும் இந்த மைக்ரோ எஸ்யுவி இந்திய வாங்குபவர்களின் தேர்வாக இருந்து வருகிறது. இந்த வலுவான விற்பனை மற்றும் தேவை காரணமாக, இந்த மாடலின் வெயிட்டிங் பீரியட் தற்போது அதிகரித்துள்ளது.
இந்த மாதம் வாடிக்கையாளர்கள் பஞ்ச் புக் செய்தால், முன்பதிவு செய்த நாளிலிருந்து டெலிவரிக்காக நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த வெயிட்டிங் பீரியட் மும்பை நகரத்திற்கானது என்பதை நினைவில் கொள்ளவும், இது வேரியன்ட், நிறம், டீலர்ஷிப், இன்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மாறுபடும். இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
மற்ற செய்திகளில், கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் பஞ்ச் வேரியன்ட்ஸில் சில மாற்றங்களைச் செய்தது. வாகன உற்பத்தியாளர் பஞ்ச் வரிசையில் மூன்று புதிய வேரியன்ட்ஸ்ஸை சேர்த்துள்ளார், கூடவே 10 வேரியன்ட்ஸ்ஸை நிறுத்தியது. புதிய வேரியன்ட்ஸில் கிரியேட்டிவ் எம்டீ, கிரியேட்டிவ் ஃபிளாக்ஷிப் எம்டீ மற்றும் கிரியேட்டிவ் ஏஎம்டீ ஆகியவை அடங்கும் மற்றும் நிறுத்தப்பட்ட அனைத்து வேரியன்ட்ஸும் கேமோ வெர்ஷன் ஆகும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்