- இந்த மாடல் 2025 முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது
- 1.0 லிட்டர் டீஎஸ்ஐ இன்ஜினுடன் கிடைக்கும்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஸ்கோடா, இந்தியப் பிரிவில் டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட் மற்றும் பிற சிறிய எஸ்யுவிகளுக்குப் போட்டியாக புதிய சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. டிசைன் ரெண்டருடன் மாடலை டீஸ் செய்து, ஸ்கோடா போட்டியைத் தொடங்கியுள்ளது, இதில் பங்கேற்பாளர்கள் எஸ்யுவியின் பெயரை உள்ளிட உதவலாம்.
இப்போது, வாகன உற்பத்தியாளர் கயாக், க்ளிக், கார்மிக், காயிக், காஸ்மிக், கைரோக், காரிக், க்விக், கைமாக் மற்றும் கைலாக் ஆகிய 10 பெயர்களை தேர்வு செய்துள்ளார். 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் திட்டமிடப்பட்ட வெளியீட்டிற்கு முன்னதாக கார் தயாரிப்பாளர் விரைவில் காரின் பெயரை அறிவிக்கும்.
தற்போது, இந்த எஸ்யுவி நாடு முழுவதும் உள்ள பல இடங்களில் சோதனை செய்யப்பட்டது. இது அதன் எம்க்யூபி, குஷாக் இலிருந்து டிசைன் ஒப்பீடுகளை எடுக்கிறது. வெர்டிகல் ஸ்லட்டுகளுடன் கூடிய ஸ்லீக்கர் கிரில், கிரில்லைச் சுற்றி எல்இடி டிஆர்எல்கள், ஸ்ப்ளிட் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், அகலமான ரேடியேட்டர் கிரில் மற்றும் ஒரு ஸ்குயர் ஃப்ரண்ட் பம்பர் ஆகியவை டிசைன் சிறப்பம்சங்களில் சில. ரியரில், எஸ்யுவி ஆனது எல்-வடிவ எல்இடி டெயில்லேம்ப்ஸ், ஷார்க் ஃபின் ஆண்டெனா, எக்ஸ்டென்டெட் ரூஃப் ரெயில்ஸ் மற்றும் ஸ்டாப் லேம்புடன் எக்ஸ்டென்டெட் ரியர் ஸ்பாய்லர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
வரவிருக்கும் ஸ்கோடா எஸ்யுவி ஆனது 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 1.0-லிட்டர் டீஎஸ்ஐ பெட்ரோல் மோட்டாருடன் வரும். இந்த இன்ஜின் ஸ்லாவியா மற்றும் குஷாக் உடன் வழங்கப்படுகிறது மேலும் இது 114bhp மற்றும் 178Nm டோர்க்கை உருவாக்குகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்