- மஹிந்திரா டீலர்ஸ்க்கு நிதி தீர்வுகளை வழங்கும்
- சமீபத்தில் ஸ்கார்பியோவின் 9 லட்சம் உற்பத்தி யூனிட்ஸை தாண்டியது
சவுத் இந்தியன் வங்கி புதன்கிழமை அன்று மஹிந்திராவுடன் மெமோராண்டம் ஆஃப் அண்டர்ஸ்டாண்டிங் (எம்ஓயு) கையெழுத்திட்டது. இந்த கூட்டணியின் கீழ், இந்த வங்கி மஹிந்திரா டீலர்ஸ்க்கு நிதி தீர்வுகளை வழங்கும், அதன் மூலம் அவர்களின் வாகன நிதி தேவைகளை பூர்த்தி செய்யும்.
பார்ட்னர்ஷிப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கை
இந்த பார்ட்னர்ஷிப்பை குறித்து பேசிய மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், சேல்ஸ், ஆட்டோமோட்டிவ் டிவிஷன், துணைத் தலைவர் பானேஸ்வர் பானர்ஜி, “சவுத் இந்தியன் வங்கிக்குடனான எங்கள் சங்கம், எங்கள் டீலர் நெட்வொர்க்கிற்கு பொருத்தமான இருப்பு நிதி தீர்வுகளை வழங்கும். இந்தியாவின் கன்சுமர்ஸ்க்கு சிறந்த சலுகைகளுடன் சேவை செய்வதில் எங்களுடன் பாரம்பரியத்தை கொண்டுள்ள எஸ்ஐபி உடன் கூட்டாளராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வேல்யூ செயின் டெலிவரி சமன்பாடுகளை மேலும் மேம்படுத்தவும், எங்கள் சேவைகளை மேம்படுத்தவும் எஸ்ஐபி உடன் நெருக்கமாகப் பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
9 லட்சம் யூனிட்ஸ் உற்பத்தியை கடந்த மஹிந்திரா
மற்ற செய்திகளில், பிராண்டின் அதிக விற்பனையான எஸ்யுவி, மஹிந்திரா ஸ்கார்பியோ 9 லட்சம் உற்பத்தி யூனிட்டின் சாதனையை தாண்டியது. ஆட்டோமேக்கர் முதலில் ஸ்கார்பியோவை 2002 இல் அறிமுகப்படுத்தியது, மேலும் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மார்க்கெட்டில் இந்த மைல்ஸ்டோனை எட்டியது. தற்போது, மஹிந்திரா ஸ்கார்பியோ ரேஞ்சை ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ க்ளாசிக் என இரண்டு அவதாரங்களில் விற்பனை செய்கிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்